திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்து ஐந்து நாட்களாக சவுடு, கிராவல் குவாரிகளை திறந்திட வேண்டும், ஆந்திராவில் இருந்து கனிமங்களை ஏற்றி வர அனுமதிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட வந்த லாரி உரிமையாளர்கள், அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் 100க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை நிறுத்தி வைத்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கடந்த் 10 தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் . திருவள்ளூர் மாவட்டத்தில் சவுடு குவாரி மற்றும் கிராவல் குவாரிகளை அரசு திறந்திட வேண்டும் என்றும், அருகே ஆந்திராவில் இருந்து உரிய அனுமதி சீட்டோடு கனிமங்களை ஏற்றி வரும் லாரிகளை முறையாக அனுமதித்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 1000க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் இயங்கி வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் குவாரிகள் செயல்படாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
60 கிலோ மீட்டர் தூரத்தில் ஆந்திராவில் இருந்து எம்.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கனிம பொருட்களை திருவள்ளூர் மாவட்டத்திற்கு கொண்டு வந்து கட்டுமானத்திற்கு தேவைப்படும் பொது மக்களுக்கு விநியோகம் செய்து வருவதாகவும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து பொருட்களை ஏற்றி வரும் போது வாடிக்கையாளர்களுக்கும் அதிக விலை நிர்ணயம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் என தெரிவித்தனர். ஆந்திராவிலிருந்து கனிமங்களை ஏற்றி வரும் வாகனங்களை சிறைப்பிடிப்பதும் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்வதும் என அதிகாரிகள் காவல்துறையினர் செயல்படுவதால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்த நிலையில் கனிம வளத்துறை அமைச்சர் பிரபு முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நடத்தப்பட்டதை மீண்டும் சாவுடு மணல் குவாரி திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
மேலும் ஆந்திரவிலிருந்து அதிக பாரம் ஏற்றி வராமல் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு ஏற்றி வந்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை வேண்டுமென லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர் அதையும் ஏற்று அதிகாரியின் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அளித்த உறுதியை ஏற்று கடந்த் ஐந்து நாட்கள் ஆக நடைபெற்று வந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.