காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி அருள்மிகு சுயம்புபிரகாசேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாற்றம் செய்து ஆக்கிரமித்து விற்பனை செய்ய முயற்சி நடைபெற்றதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து கோவிலின் பரம்பரை அறங்காவலர் குடும்பத்தினர் ஏற்கனவே வருவாய்த் துறை மற்றும் காவல்துறையில் புகார் அளித்திருந்த நிலையில், சம்பந்தப்பட்ட நபர்கள் நிலத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சம்பவ இடத்தில் திரண்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த வட்டாட்சியர் ராஜா மற்றும் காவல்துறையினர், நிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 2 ஜே.சி.பி. இயந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். கோவில் சொத்துக்களை மீட்டு, ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே பழனி கோவில் நிலம் தொடர்பான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது இலுப்பக்குடி கோவில் நிலத்தை விற்பனை செய்ய முயன்றதாக எழுந்துள்ள புகார் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.