சென்னையில் கடந்த 24 மணி நேரமாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக வேளச்சேரி, தாம்பரம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் முழுவதும் நீரில் மூழ்கியதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
பேருந்து மற்றும் ரயில் சேவைகள் சில இடங்களில் தாமதமாக இயக்கப்படுகின்றன. பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் அவசர உதவி அணிகளை தயார் நிலையில் வைத்துள்ளது. மேலும், மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை தொடர்ந்து பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.