சென்னை: தமிழக சட்​டப்​பேரவைக்கு வருகை தந்த திமுகவினர் “வாயை திறங்க CM” என்ற வாசகத்தோடு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.

மேலும், ‘தற்குறி ஆட்சி தமிழ்நாடே சாட்சி’, ‘ரீல்ஸ் இங்கே, ரியல் எங்கே?’, ‘தூய சக்தி அல்ல துயர சக்தி’ என்று தவெக ஆட்சிக்கு வந்ததை விமர்சித்தும், ‘கதறல் கேட்கவில்லையா சிஎம்?’ என்று தமிழகத்தில் நிகழும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு நீதி கேட்பதுபோலவும் பல்வேறு வாசகங்கள் கொண்ட பேனர்களையும் அணிந்திருந்தனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் வாயைத்திறங்க சி.எம். என்றபேட்ஜ் அணிந்து சிரித்த முகத்துடன் சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். 

Related

“தனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்”: இபிஎஸ் திட்டவட்ட அறிவிப்பு”