ஆலந்தூர்: திமுக முன்னாள் தலைவர் கலைஞர் 8 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி மற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நங்கநல்லூர் எம்ஜிஆர் சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆலந்தூர் தெற்கு பகுதி 167 வது வட்ட திமுக செயலாளர் ஜெ. நடராஜன் தலைமை வகித்தார். ஆலந்தூர் மண்டல குழு தலைவர் எம். சந்திரன் முன்னாள் எம்எல்ஏ வி.என். பி.வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி கலந்துகொண்டு கலைஞர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 500 பேருக்கு காலை உணவான இட்லி, பொங்கல், வடை போன்றவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.கே. இப்ராகிம், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் ஜெயராம் மார்த்தாண்டன், வட்ட செயலாளர்கள் உலகநாதன், கே.ஆர்.ஜெகதீஸ்வரன்,சாலமோன், வேலவன் சரவணா, அணிகளின் நிர்வாகிகள் வாஞ்சிநாதன், தி.எழிலரசு , பாபு, கேபிள்ராஜா, மீன்மோகன், பிரான்சிஸ் சுதர்சன், மாவட்ட பிரதிநிதிகள் லியோபிரபாகரன் ரமணா ஜெயக்குமார் மூ சத்யா,மற்றும் பேராசிரியர் சீனிவாசன், ராஜ்குமார், குருமூர்த்தி, சரவணன், சதீஷ், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.