ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரிஷப் பந்த் தலைமையில் களமிறங்குகிறது.
இம்முறை அந்த அணி முழுமையான உடற்தகுதியை கொண்ட வீரர்களை உள்ளடக்கியதாக உள்ளது. அனுபவம் வாய்ந்த முகமது ஷமி, அன்ரிச் நோர்க்கியா வேகப்பந்து வீச்சுத்துறையில் பலம் சேர்க்கக்கூடும். இளம் வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவும் முழு உடற்தகுதியுடன் களமிறங்குகிறார்.
போட்டி முடிவடைந்ததும் ரவீந்திர ஜடேஜா கூறியதாவது: 12 முதல் 13 ஆண்டுகள் விளையாடிய சிஎஸ்கே போன்ற ஒரு அணியை விட்டு வெளியேறுவது ஆரம்பத்தில் சற்று கடினமாக இருந்தது. அது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். ஆனால் இது போன்ற மாற்றங்களும் பயணத்தின் ஒரு பகுதிதான் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், நான் முதன்முதலில் ஐபிஎல் கோப்பையை வென்ற அதே அணிக்கு இப்போது திரும்பியுள்ளேன். அந்த நினைவுகள் எப்போதும் என்னுடனேயே இருக்கும். யு-19 உலகக் கோப்பைக்குப் பிறகு, எனது ஐபிஎல் வாழ்க்கையை ராஜஸ்தான் அணியில்தான் தொடங்கினேன், எனது முதல் சீசனிலேயே கோப்பையையும் வென்றேன். அந்த நினைவுகளையும் நேர்மறையான எண்ணங்களையும் சுமந்து வந்துள்ளேன்.
இந்த புதிய குழுவுடன் என்னால் முடிந்தவரை கற்றுக்கொள்வதும், எனது அனுபவத்தை அணியுடன் பகிர்ந்து கொள்வதுமே எனது லட்சியம். இவ்வாறு ரவீந்திர ஜடேஜா கூறினார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.