முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் கூட்டம் அதிகமாகக் கூடியதால் வில்லிவாக்கம் தொகுதியில் செய்ய இருந்த பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு நீலாங்கரையில் உள்ள தனது வீட்டுக்கு விஜய் திரும்பினார். இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விஜய்யின் பிரச்சாரத்துக்கு திரண்ட பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைப்படுத்துதல், முன்னெச்சரிகை நடவடிக்கைகளை சென்னைப் பெருநகர காவல்துறை செயல்படுத்தாததால் தவெக தலைவர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வில்லிவாக்கம் தொகுதிதெருமுனைப் பிரசாரக் கூட்டத்தை ரத்து செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்' எனக் கூறியிருக்கிறார்.

கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், ‘தேர்தல் ஆணையத்திடம் முறையாக அனுமதி பெற்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால், முதல்வர் வருகிறார் என்று கூறி பிரசாரத்திற்கு தடை விதிப்பது கண்டனத்திற்குரியது.

திமுகவின் கைப்பாவையாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள். ஒருதலைபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.