மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகா தேவி கோயிலுக்கு சென்றார்.
தமிழக முதல்வர் இன்று உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வருகை தந்தார். அதனையொட்டி உடுப்பு மாவட்டத்தில் 'Z+' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வருக்கான நெருக்கமான பாதுகாப்புப் படையில், தமிழகக் காவல்துறையைச் சேர்ந்த டி.ஐ.ஜி. மற்றும் எஸ்.பி. உள்ளிட்ட 40 காவலர்கள் இடம்பெற்றிருந்தார்கள். முதல்வரின் வாகன அணிவகுப்பிற்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் உடுப்பி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செய்திருந்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.