இசைஞானி இளையராஜா இசையில் அமைய இருக்கும் இப்படத்தின் பூஜை இளையராஜாவின் இசைக்கோவிலில் இனிதே நடைபெற்றது.
இசைஞானி இளையராஜா, கங்கை அமரன், இயக்குனர் ஞான ராஜசேகர் இயக்குனர் பாணர், தயாரிப்பாளர் எ ஸ்.கே ஸ்ரீதர் குத்து விளக்கேற்ற விழா இனிதே துவங்கியது.
தென்னகத்தில் பல மலைப்பகுதிகளில் படமாகும் இப்படத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பல நடிகர்கள், நடிகைகள் நடிக்கின்றனர்.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட இந்த படம், இயற்கை எழில்கொஞ்சும் வெள்ளிமலை பகுதியில் முதற்கட்டமாக படப்பிடிப்பு துவங்குகிறது.
இப்படத்தில் ஆராதனா பட், ஸ்ரீ சத்யா, தலைவாசல் விஜய், கஞ்சா கருப்பு, முத்துகாளை, ஆத்தங்குடி இளையராஜா, பிரபா, ஷர்மிளா, ஜனனி அம்மாள் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - எம் வி பன்னீர்செல்வம், எடிட்டிங் - காசி விஸ்வநாதன், சண்டைப்பயிர்ச்சி - மைக்கேல், மக்கள் தொடர்பு - டைமண்ட் பாபு.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.